
இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா யோசிக்கலாம்னு நெனைச்சு ஒரு பெக் பச்ச தண்ணி (உண்மை தானுங்க.) சாப்டுட்டு வந்து மூளைய சொரிஞ்சதுல எனக்கு கொஞ்சம் எகனைக்கு மொகனையா யோசிக்க தோனுச்சு,,. அதன் பிரதிபலிப்பு தான் இங்க..
Oo.......Oo...OO.......oO......
நட்சத்திரங்களை நீ பார்க்கும் போது கூட
நட்சு திரவமாக மாறி விடுகிறது..
Oo.......Oo...OO.......oO......
சூரியன் மன்னிப்பு கோருகிறது உன்னிடம்...
உன்னை பார்த்தவுடன் தான் நான் பிரகாசமாகிறேன்..
Oo.......Oo...OO.......oO......
அந்த கடல் ஓரத்தில் அலை ஒன்றும் சிறு மலை
ஒன்றும் முத்தமிடும் போது நீ சிலையாய் நின்று ரசித்த
காட்சிகள் இன்னும் என் நினைவில்... அழியாமல்.
Oo.......Oo...OO.......oO......
உனது செருப்புகளுக்கு கூட போட்டி நிலவுகிறது..
யாரை முதலில் அணிவது என்று..
Oo.......Oo...OO.......oO......
ரொம்ப ஓவரா யோசிச்சு இருந்தாலும் , மொக்கையா இருந்தாலும் பின்னோட்டம் போட மறந்துடாதீங்க.. கண்டிப்பா பல ________________ எதிர்நோக்கி... நான்..
நினைவுகளுடன்...
மஹா..


0 மறுமொழிகள்:
Post a Comment