
நித்தம் நித்தம் ஒரு கவிதை எழுதி..
அதில் நினைவெல்லாம் உன்னை சுமந்து ,
காலை சூரியன் கண்திறக்கும் வரை
என் பாவை உனக்கான கவிதை இது..
மீண்டும் உன்னை சந்திப்பதற்கான
ஆசையில் நான் அவசரமாக எழுதிய கவிதை
கூட என்னை பார்த்து சிரிக்கிறது..
கவிதையை பெறும் நீ காதல் வயப்பட்டு
கண்ணாலேயே சிரிப்பாயா..? இல்லை..
மௌனத்தாலேயே கொல்லுவாயா..?
இல்லை.. வேண்டாம் என்று சொல்லி..
நீயே படித்து சொல் என்று என்னிடம் கொஞ்சி
என் மேல் முகம் புதைத்து சிரிப்பாயா..?
இல்லை.. உன் கவிதை பிடித்து இருக்கிறது..
உன்னை பிடிக்கவில்லை என்று சொல்வாயா...?
உனக்கான கவிதை எழுதி முடிக்கையில்..
அங்கு என்னையே நான் தொலைத்து இருந்தேன்,,.
கவிதை எழுதும் போதே உன்னை பற்றியான
சிந்தனைகளை பார்த்தாயா..
நான் காணும் கனவில் கூட உன்னை பற்றியான
நினைவுகள் தான் அன்பே....
மீண்டும் ஒருமுறை சொல்லவேண்டுமா என்ன.?
எந்தன் நிலை பற்றி..? நீயே சொல்....
."."."."."."."."."."."


0 மறுமொழிகள்:
Post a Comment