
விரும்பும் போது விலகி சென்ற அவள்..
இன்று விலகும் போது விரும்பி வந்து நிற்கிறாள்..
நான் என்ன செய்ய?
நீ விட்டுவிட்டு சென்ற நம் காதலும், அதன் நினைவுகளும்
என்னையும் அறியாமல் பாதுகாத்து வருவது தான் தெரியுமா?
காற்றை மட்டும் சுவாசித்த நான் இன்று உன்னையும் சேர்த்து அல்லவா
சுவாசிக்கிறேன்.. அதுவாது தெரியுமா?
நாம் பழகியதற்கு சாட்சியாக இதோ இந்த காதல் கடிதமும்
இருப்பது உனக்கு பிடிக்க வில்லையா?
இதோ..இன்று மட்டும் வந்து என் காதலை கேட்கிறாயே இது
எந்த விதத்தில் நியாயம்?
பதில் சொல் அன்பே..
நான் இப்படியே இருந்துவிடுகிறேன்,..
மீண்டும் வேண்டாம் ஒரு காதல் வலி.
......
......


0 மறுமொழிகள்:
Post a Comment